அதிர்ச்சி தகவல்
தமிழக அரசு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஒரு சிலர் வேண்டுமென்றே கொரோனா வைரசை பரப்பி வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்தது
இந்த நிலையில் இது குறித்த விசாரணையில் சென்னை பெரியமேட்டில் கொரோனா பரப்பியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களை கைது செய்தனர்
சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரகசியமாக தங்கியிருந்த மூன்று பேருக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் இதனை அடுத்து அவர்கள் சென்னை ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
அக்கம்பக்கத்தினர் கூட தெரியாமல் ரகசியமாக தங்கி சென்னையில் கொரோனா பரப்பியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்
Leave a Reply
You must be logged in to post a comment.