ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களை பறிமுதல்: தேர்தல் ஆணையம் விளக்கம்
ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்கள் பறிமுதல் பற்றி சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக சத்யபிரத சாகு கூறியுள்ளார்.
முன்னதாக ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தவுடன் அந்த புத்தகத்தை வெளியிடவிருந்த பாரதி புத்தகாலயத்தில் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.