யாருக்கும் ரிப்போர்ட் செய்ய தேவையில்லை: பொன்மாணிக்கவேலுக்கு முழு அதிகாரம்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் தனது விசாரணை விவரங்களை சீலிட்ட கவரில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தால் போதுமானது என்றும், உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் எந்த அறிக்கையும் அளிக்க வேண்டிய தேவை இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கருதப்படுபவர்களுக்கு கிலி ஏற்பட்டிருக்கும்
இந்த உத்தரவின் காரணமாக பொன்.மாணிக்கவேல் இனிமேல் தனது நியாயமான செயல்பாட்டை, தொடர்வதில் எந்த தடையும் இல்லை என்பதால் இனி விசாரணை விறுவிறுப்பு அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.