மோடி தூக்கில் தொங்க தயாரா? மல்லிகார்ஜூன கார்கே சர்ச்சை பேச்சு

ஒவ்வொரு தேர்தலின்போது அரசியல் கட்சி தலைவர்கள் பிரச்சாரம் செய்யும்போது தங்களுடைய கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் எதிர்க்கட்சிகள் படுதோல்வி அடையும் என்று பேசுவது வாடிக்கையான ஒன்றே. அந்த வகையில் பிரதமர் மோடியும் தனது தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி 40க்கும் குறைவான தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்று பேசியுள்ளார்.

இந்த நிலையில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இதுகுறித்து பேசியபோது, ‘காங்கிரஸ் 40 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறாது என செல்லும் இடமெல்லாம் மோடி கூறுகிறார். அப்படி வெற்றி பெற்றால் டெல்லி விஜய் சவுக்கில் அவர் தூக்கில் தொங்க தயாரா என்றும் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார்.

இது தரம் தாழ்ந்த விமர்சனம் என்றும், இதற்காக கார்கே மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், கர்நாடக பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஷோபா வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply