மோடி இதுவரை டீ விற்றதே இல்லை: பிரவீன் தொகடியா அதிர்ச்சி தகவல்
பிரதமர் மோடி சிறுவயதில் டீ விற்றதாகவும், டீ விற்ற ஒருவர் தனது உழைப்பால் தற்போது நாட்டின் பிரதமர் ஆகியிருப்பதாகவும் பாஜகவினர் ஒவ்வொரு மேடையிலும் கூறுவதுண்டு
இந்த நிலையில் விஹெச்பி அமைப்பின் முன்னாள் தலைவர் பிரவீன் தொகடியா இதுகுறித்து கூறியபோது, ‘பிரதமர் மோடி டீ விற்று ஒருபோதும் நான் பார்த்ததே இல்லை, மக்களிடம் அனுதாபத்தை பெறுவதற்காகவே அவ்வாறு அவர் கூறிவந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.
பிரவீன் தொகடியாவின் இந்த கருத்து பாஜகவினர் உள்பட அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பிரதமர் மோடியுடன் நாற்பது ஆண்டு பழகிய ஒருவரே இதனை கூறியிருப்பதால் இதில் உண்மை இருக்கும் என்றே பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.