மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர்-அர்ஜூனர் என்றால் கவுரவர்கள் யார்? அசதுத்தீன் ஒவைசி கேள்வி
சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோடியையும் அமித்ஷாவையும் கிருஷ்ணர்-அர்ஜூனர் என்று உவமைப்படுத்தி கூறியதோடு, இதில் யார் கிருஷ்ணர், யார் அர்ஜூனர் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.
ரஜினியின் இந்த கருத்தை ஏற்கனவே பலர் விமர்சனம் செய்துள்ள நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் அசதுத்தீன் ஒவைசி என்பவர் இதுகுறித்து கூறியபோது, ‘மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணர்-அர்ஜூனர் என்றால் கவுரவர்கள் யார்? என்று நடிகர் ரஜினிக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இவருடைய கேள்விக்கு ரஜினி பதிலளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Leave a Reply
You must be logged in to post a comment.