மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி: தேர்தல் குறித்து பிரியங்கா
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா திடீரென தீவிர் அரசியலில் குதித்த நிலையில் 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி என்று குறிப்பிட்டுள்ளா.ர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையின் மூலம் பல்வேறு கருத்துக்களை அறிந்து கொண்டேன். அடிப்படை ரீதியாக தேர்தல் பணிகளை எவ்வாறு செய்வது, என்னென்ன மாற்றங்களை கொண்டுவந்து பணிகளை தீவிரமாக்குவது என்பதை ஆலோசித்திருக்கிறோம். நான் காங்கிரஸ் கட்சியின் மூலம் பல்வேறு விஷயங்களை தெரிந்து கொண்டேன். எவ்வாறு தேர்தல் வியூகங்களை வகுப்பது என்பதிலும், கட்சி அமைப்பை எவ்வாறு வழிநடத்துவது என்பதிலும் ஒரு தெளிவான நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம்.
2019 பாராளுமன்ற தேர்தல் என்பது எனக்கும் மோடிக்குமான போட்டி அல்ல. இது பிரதமர் மோடிக்கும், எனது சகோதரர் ராகுலுக்கும் இடையே நடக்கும் போட்டி. மோடியுடன் ராகுல் போரிட்டு வருகிறார்.
அமலாக்க பிரிவினர் எனது கணவரின் தாயாருக்கு சம்மன் அனுப்பியது போன்ற விவகாரங்கள் எல்லாம் நடந்து கொண்டு தான் இருக்கும். ஆனாலும் எனது பணியை நான் தொடர்ந்து செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.