மே 19ஆம் தேதி எங்கெங்கு எத்தனை வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு!

தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற்ற சில தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது

அதன்படி தமிழகத்தில் மே 19ம் தேதி 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதில் தருமபுரி – 8 வாக்குச்சாவடிகள் , திருவள்ளூர்-1 வாக்குச்சாவடிகள் , கடலூர்-1 வாக்குச்சாவடி , தேனி-2 வாக்குச்சாவடிகள் , ஈரோடு-1 வாக்குச்சாவடி ஆகிய வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

 

 

Leave a Reply