shadow

மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் 15 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் இன்னும் போதுமான தடுப்பூசிகள் வரவில்லை என்பதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது

ஆனால் அதேநேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையில் பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி போடப்படும் என அறிவித்துள்ளது

தங்களிடம் முன்பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி போடுமளவுக்கு தடுப்பூசிகள் இருப்பு இருப்பதாகவும் எனவே ஏற்கனவே முன்பதிவு செய்தவர்கள் தாராளமாக அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது

Leave a Reply