shadow

மேல்முறையீடு இல்லை, தேர்தலை சந்திக்க தயார்: டிடிவி தினகரன்

சமீபத்தில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என 3வது நீதிபதி அளித்த பரபரப்பான தீர்ப்பை அடுத்து தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்வார்கள் என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்திருக்கும் தகவலின்படி மேல்முறையீடு செய்யாமல், இடைத்தேர்தலை சந்திக்க 18 பேரும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தினகரன் பேட்டி அளித்துள்ளார்.

மேலும் 18 பேரின் நலனும், கட்சியின் நலனும், மக்களின் விருப்பமும் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதாகவே இருப்பதாகவும், தொகுதி மக்களை நேரில் சந்தித்து 18 பேரும் கருத்து கேட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து விரைவில் 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply