மேலும் 3 எம்.எல்.ஏக்களுக்கு ஆபத்து: அடுத்தடுத்த அதிரடியால் தினகரன் கலக்கம்
தினகரனுக்கு ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்களின் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மேலும் 3 பேர்களுக்கும் அதிமுக தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தவிர டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அறங்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து பேசிய கருணாஸை ரத்தினசபாபதி சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். குற்றாலத்தில் 18 தகுதி நீக்க எம்எல்ஏக்களும் தங்க வைக்கப்பட்ட போது இவர்கள் 3 பேரும் சென்றிருந்தனர். இந்நிலையில் இந்த 3 பேரிடமும் விளக்கம் கேட்டு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உரிய விளக்கத்தை இந்த மூன்று எம்.எல்.ஏக்களும் தராவிட்டால் இவர்கள் மூவரும் தகுதிநீக்கம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.