மேலும் ஒரு மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை என அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருவதை அடுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு மட்டும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தை அடுத்து இன்று வேலூர் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை வேலூர் மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்தார்.

ஏற்கனவே அக்டோபர் 25, 26, மற்றும் 27 அதாவது கடந்த சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளி பண்டிகைக்காக விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இரண்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply