அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் ஏற்கனவே 5 எம்எல்ஏக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும், உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளி வந்தாலும் இதனை அமைச்சர் தரப்பில் இருந்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பீகாரில் உள்ள அமைச்சர் வினோத் சிங் என்பவர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

மேலும் அமைச்சரின் மனைவி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply