shadow

மேகதாது விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக மாநிலம் அணைக்கட்ட ஆய்வு செய்தவற்கான அனுமதியை சமீபத்தில் மத்திய அரசு அளித்தது. இதற்கு எதிர்த்து தமிழக அரசு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.

மத்திய நீர்வள ஆணையம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

முன்னதாக ரூ.5912 கோடியில் மேகதாதுவில் அணைக் கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டு அதற்கான பணியில் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேகதாது அணை விவகாரத்தில் பிரதமரை சந்தித்து கர்நாடக அரசுக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்ய தமிழிசை முயற்சிக்க வேண்டும் என தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

 

Leave a Reply