shadow

மேகதாது விவகாரம்: கர்நாடக அமைச்சரின் கோரிக்கை நிராகரிப்பு

தமிழக, கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான காவிரி பிரச்சனை ஒருவழியாக நீண்ட சட்ட போராட்டங்களுக்கு பின் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் தற்போது இரு மாநிலங்களுக்கும் இடையே மேகதாது அணை விவகாரம் சூடு பிடித்துள்ளது. இந்த அணை குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழகத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது.

இந்த நிலையில் மேகதாது விவகாரத்தில் பிரச்னையை பேசித்தீர்க்கலாம் என்ற கர்நாடக அமைச்சர் சிவகுமாரின் கோரிக்கையை தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் நிராகரித்தார். கர்நாடகாவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 

Leave a Reply