shadow

மேகதாது போராட்டம் ஒரு கண்துடைப்பு நாடகம்: தமிழிசை செளந்திரராஜன்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் கண்டித்து வரும் நிலையில் பாஜக மட்டும் இதற்கு காரணம் கூறி சமாளித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதித்ததை கண்டித்து எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் இதுகுறித்து கூறியபோது, ‘மேகதாது விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் கண்துடைப்பு நாடகம் என்றும், மேகதாது அணை கட்டுவது தொடர்பாக ஆய்வு செய்ய மட்டுமே மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாகவும், மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் குற்றம் சாட்டுகின்றனர் என்றும் கூறியுள்ளார்,.

Leave a Reply