மெர்சல் படக்குழுவிற்கு எஸ்.எஸ்.ராஜமெளலி வாழ்த்து
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, ‘மெர்சல்’ படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளார். ஸ்ரீதேனாண்டாள் நிறுவனத்தின் 100வது படம், விஜய்யின் 25வது ஆண்டு படம், ஏ.ஆர்.ரஹ்மானின் 25வது ஆண்டு படம் போன்ற பெருமையை பெற்றுள்ள இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று அவர் வெளியிட்டுள்ள வீடியோ செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘மெர்சல்’ படத்திற்கு எஸ்.எஸ்.ராஜமெளலியின் தந்தையும் பாகுபலி மற்றும் ‘பாகுபல் இ2’ ஆகிய படங்களின் எழுத்தாளருமான விஜயேந்திர பிரசாத் அவர்கள் தான் திரைக்கதை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.