மெட்ரோ ரயில் நிலையத்தில் 5 அடி நீள பாம்பு: அதிர்ச்சியில் பயணிகள்
டெல்லி மெட்ரோ நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பிளாட்பார்ம் பகுதியில் 5 அடி நீள பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
டெல்லியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் ஒன்றான துவாரகா என்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாலையில் 5 அடி நீள பாம்பு ஒன்று பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையில் திடீரென ஊர்ந்து சென்றது
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்ற நிலையில் பயணிகள் அந்த பாம்பை பார்த்து அலறி அடித்து அங்குமிங்கும் ஓடினர். இதுகுறித்து மெட்ரோ நிர்வாகிகள் அளித்த தகவலின் படி வனத்துறையினர் விரைந்து வந்து, பாம்பு அந்த மெட்ரோ ரயிலில் இருந்து தப்பிச் செல்லாத வகையில் அனைத்து பாதைகளும் அடைத்தனர். அதன்பின்னர் பாதுகாப்பாக அந்த பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.