மெட்ரோ ரயிலில் இருந்து குதித்து 3 பேர் தற்கொலை: திருமணமாகாத விரக்தி

மெட்ரோ ரயிலில் இருந்து மூன்று பேர் குதித்து தற்கொலை செய்து கொண்டதாகவும், தற்கொலைக்கு முயன்ற ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும் டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

டெல்லியில் நேற்று தனித்தனியாக மூன்று இடங்களில் நடந்த தற்கொலை முயற்சியில் மூவர் உயிரிழந்தனர். இதில் ஒருவர் தனக்கு 40 வயதாகியும் திருமணம் ஆகவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்வதாக லட்டர் எழுதி வைத்துள்ளார்.

டெல்லி மெட்ரோ ரயிலில் இருந்து ஒரே நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டதும் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டெல்லி மெட்ரோ ரயில்களில் பாதுகாப்பு பலப்படுத்த மெட்ரோ நிர்வாகம் ஆலோசித்து வருகிறது

Leave a Reply