மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளையே மாற்றிய கோலவிவகாரம்: எஸ்வி சேகர்

கோலம் போடுவதையே மூடநம்பிக்கை என்று பேசிவந்த நாத்திகவாதிகள் தற்போது ஓடி ஓடி கோலம் போடுவது பெரும் ஆச்சரியமாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது:

மூடநம்பிக்கை பேசிய நாத்திகவாதிகளை கோலம் போட வைத்து, மத கட்சி பேதமின்றி தேசீயக்கொடியை ஏந்த வைத்து, நம் இந்திய திருநாட்டை ஒன்று படுத்திய நம் பிரதமருக்கு நன்றி சொல்வோம் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக தலைவர் முக ஸ்டாலின், திமுக எம்பி கனிமொழி, மு.கருணாநிதி வீடு உள்பட பல திமுகவினர் வீடுகளில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோலம் போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply