முரசொலி மூலப்பத்திரத்தை முதல்முதலாக வெளியே கொண்டு வந்த திமுக!

சென்னையில் உள்ள முரசொலி நாளிதழ் கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதாக டாக்டர் ராமதாஸ் உள்ளிட்ட ஒரு சில அரசியல்வாதிகளும், நெட்டிசன்களும் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த கட்டிடத்தின் மூல பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்

இந்த நிலையில் தற்போது மூலம்பத்திரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக திமுக அறிவித்துள்ளது. முரசொலி கட்டிடம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய டாக்டர் ராமதாஸ் மீது சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதாகவும், இந்த வழக்கின் போது மூலப்பத்திரம் உள்பட முக்கிய ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ் பாரதி அவர்கள் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து முதன்முதலாக மூலப்பத்திரத்தை திமுக வெளியே கொண்டு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply