முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் உறவினர் வீடுகளில் திடீர் ரெய்டு
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த சில மாதங்களாகவே பாஜகவின் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பதிலுக்கு மத்திய அரசும் ப.சிதம்பரம் மகன் மீது வழக்குகள் போட்டு பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் ப.சிதம்பரம் சற்றுமுன்னர் ப. சிதம்பரத்தின் சென்னை மற்றும் கொல்கத்தா உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர்.
6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்து வருவதாகவும் இந்த சோதனையின் முடிவில் கைப்பற்றிய ஆவணங்கள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
சென்னையில் ப.சிதம்பரம் அவர்களின் உறவினர்களான கைலாசம், ராம்ஜி நடராஜன், சுஜய் சுப்ரமூர்த்தி ஆகியோர் வீடுகளிலும், கொல்கட்டாவில் மனோஜ் மோகன்கா வீட்டிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.