முன்னாள் திமுக அமைச்சர் சற்குணபாண்டியன் மரணம்
முன்னாள் தமிழக அமைச்சரும் திமுகவின் துணை பொதுச்செயலாளருமான சற்குண பாண்டியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 1989 மற்றும் 1996ஆம் வருடங்களில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட சற்குணபாண்டியன் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் கடந்த 1996 முதல் 2001ஆம் ஆண்டு வரை சமூக நலத்துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவாக இருந்த சற்குணபாண்டியன், இன்று அதிகாலை 2 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராயபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெறும் என தெரிகிறது. இவருடைய மருமகள் ஷிம்லா முத்துச்சோழன், சமீபத்தில் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.