முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் காலமானார்
முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மாரடைப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சற்றுமுன் காலமானார். அவருக்கு வயது 58
தமிழக சட்டமன்ற உறுப்பினராக 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம்வழுதி அவர்களுக்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சையின் பலனின்றி சற்றுமுன் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.
திமுகவின் முக்கிய தலைவரும் கருணாநிதியின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த பரிதி இளம்வழுதி, கடந்த 2013ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.