முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கீழ்நத்தம் என்ற பகுதியில் நத்தம் விசுவநாதன் ஓட்டு சேகரிக்க வந்த போது அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு அவர் பணம் வழங்கியதாக தெரிகிறது

இது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

மேலும் நத்தம் விசுவநாதன் மற்றும் அதிமுகவினர் ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் வழங்கியது குறித்த வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரி புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply