முன்னணி நடிகைகளை காட்டிக்கொடுத்த கொள்ளையன் முருகன்: கோலிவுட்டில் பரபரப்பு

தன்னிடம் நகைகளை வாங்கிய நடிகைகளை போலீசார்களிடம் நகைக்கடை கொள்ளையன் முருகன் காட்டி கொடுத்துவிட்டதாகவும், இதனையடுத்து அந்த பிரபல நடிகைகளிடம் போலீசார் அடுத்தகட்ட விசாரணை செய்யவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளதாக திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது

கொள்ளையன் முருகன் வாக்குமூலத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக முக்கிய நடிகைகளிடம் விசாரணை செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நகைக்கடை கொள்ளை விசாரணையில் பல நடிகைகளின் உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிகிறது. கொள்ளையன் முருகன் எந்தெந்த நடிகைகளிடம் தொடர்பு வைத்திருந்தான் என்று ஒரு பெரிய லிஸ்ட்டே இருப்பதால் நடிகைகள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply