நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்தது
இந்த தோல்விக்கு முதல் காரணம் தொடக்க ஆட்டக்காரர்கள் படுமோசமாக சொதப்பி விளையாடியதே
முதல் ஓவரில் ஒரு விக்கெட் மூன்றாவது ஓவரில் 2 விக்கெட்டுக்கு என மொத்தம் 3 ஓவர்களில் 3 விக்கெட் விழுந்ததே சென்னை அணியின் நேற்றைய சரிவுக்கு காரணமாக இருந்தது
அது மட்டுமின்றி நேற்று டிரெண்ட் போல்ட் முதல் இரண்டு ஓவர்கள் வீசி ஒரு ரன் கூட கொடுக்காமல் 2 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார் என்பதும் பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுத்து அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.