shadow

முதல் டி-20 போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று முதலாவது டி-20 ஆட்டம் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 18.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 118 ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை வந்துவிட்டதால் ஆட்டம் தடைபட்டாது இதனையடுத்து இந்திய அணிக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு அளிக்கப்பட்டது.

இந்த எளிய இலக்கை இந்திய அணி 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னணி பெற்றுள்ளது.

Leave a Reply