முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் சோதனை.

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததற்கு பெரும் கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரிலும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர்.

ஆனால் அதே நேரத்தில் நேற்று பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை செய்த அதிகாரிகளை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply