முதல்வர் அழைத்து பேசினால் போராட்டம் பரிசீலனை: ஜாக்டோ ஜியோ
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் செய்யவிருப்பதாக ஜாக்டோஜியோ அமைப்பு கூறியிருப்பதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் இயங்குவதில் சிரமம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பிக்கும் டிசம்பர் 4ஆம் தேதிக்கு முன் தமிழக முதல்வர் எங்களை அழைத்து பேசினால் போராட்டம் குறித்து பரிசீலிப்பதாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜெயலலிதா நினைவு நாளான டிசம்பர் 5ல் அவரது படத்தை கையில் ஏந்தியும், டிசம்பர் 7-ம் தேதி மாவட்ட அளவில் மறியல் போராட்டமும் நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.