shadow

முதல்வரை சந்தித்த தினகரன் ஆதரவு எம்பி

18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கத்திற்கு பின்னர் தினகரன் அணி ஆட்டம் கண்டுள்ளதாகவே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த விஷயம் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் தீர்ப்பு வரை தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களுக்கு எந்தவித பவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியே நீதிமன்றத்தில் தினகரன் அணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தாலும் முதல்வர் தரப்பில் அப்பீல் செய்ய வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் தினகரன் அணியில் உள்ளவர்கள் அணிமாறும் எண்ணத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் முதல்படியாக சற்றுமுன்னர் தென்காசி தொகுதி எம்பி வசந்திமுருகேசன் இன்று முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தினகரன் அணி ஆதரவி எம்பிக்களில் ஒன்று குறைந்துள்ளது

மேலும் இன்னும் ஒருசிலர் தினகரன் அணியில் இருந்து முதல்வர் அணிக்கு செல்ல தயாராக இருப்பதாக கூறப்படுவதால் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை என்றே கூறப்படுகிறது.

Leave a Reply