பெரும் பரபரப்பு

தமிழக முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு மத்திய அமைச்சர் ஒருவர் கொடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் நிஷாங்க் அவர்கள் தனது டுவிட்டரில் நேற்று ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டில் திரு ஆர். சந்திரசேகரன் அவர்கள் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதலாவது இயக்குனராக பணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இன்னொரு டுவிட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு இது ஒரு எடுத்துக் காட்டாக திகழ்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தமிழக முதல்வருக்கு எங்கள் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த டுவிட்டில் அவர் பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர்களுக்கு டேக் செய்துள்ளார். முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்து அவர் டேக் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply