முதல்வரின் குலதெய்வ கோவிலில் கொள்ளை முயற்சி: ஈரோடு அருகே பரபரப்பு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் குலதெய்வ கோவிலான அப்பத்தாள் கோவிலில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஈரோடு அருகே உள்ள நசியனூர் அப்பத்தா கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் சிலர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் போலீசார் உடனே கோவிலுக்கு விரைந்துள்ளனர். இதனையறிந்த கொள்ளையர்கள் கொள்ளை முயற்சியை கைவிட்டு தப்பியோடி விட்டனர்.

இதே கோவில் கடந்த 8 மாதங்களுக்கு முன் கொள்ளையர்கள் விலை மதிப்புள்ள நகைகளும் பணமும் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை நடந்து எட்டு மாதங்கள் ஆகியும் இன்னும் கொள்ளையர் குறித்து ஒரு துப்பும் துலங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply