shadow

முசாபர்பூர் கலவரம்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் முசாபர்பூரில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த தீர்ப்பில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து முசாபர் நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply