‘மீ டூ’ விவகாரம்: ரூ.1 நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த நடிகர்
மீடூவில் பாலியல் புகார் தெரிவித்த பாலிவுட் இயக்குநரும், எழுத்தாளருமான விண்டா நந்தா ஒரு ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக்கோரி பாலிவுட் நடிகர் அலோக்நாத் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான் வின்டா நந்தா என்பவர் சமீபத்தில் ‘மீ டூ’ ஹேஷ்டேக்கில் அலோக்நாத் மீது பாலியல் புகார் கூறினார். ஆனால் இந்த புகாரை எதிர்த்து மும்பை உள்ள அந்தேரியில் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடிகர் அலோக்நாத் வழக்கு தொடர்ந்தனர்.
அடிப்படை ஆதாரமற்ற புகாரால், வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கு காரணமான வின்டா நந்தா ஒரு ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அலோக்நாத்தின் மனைவி ஆசுவின் வாக்குமூலத்தை பதிவு செய்து, விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்திவைத்தது.
Leave a Reply
You must be logged in to post a comment.