மீதமுள்ள 3 கட்ட தேர்தல் தேதியில் மாற்றமா?

election commissionரமலான் மாதம் நடைபெறுவதால், முன்கூட்டியே வாக்குப்பதிவை ஆரம்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது, ‘மீதமுள்ள 3 கட்ட தேர்தலில், நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ரமலான் மாதம் தொடர்பாக எழுந்துள்ள கோரிக்கை மீது தேர்தல் ஆணையம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது

இந்தியாவில் ஏற்கனவே 4 கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 11, 18, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் முடிந்துவிட்டது. இன்னும் மே 6, 12 மற்றும் 19 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply