மீண்டும் செல்போனை தட்டிவிட்டு மன்னிப்பு கேட்ட சிவகுமார்
கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை செல்பி எடுத்த இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டு பின் அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு அவருக்கு புதிய செல்போனை நடிகர் சிவகுமார் வாங்கி கொடுத்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் ஒருவருடைய செல்போனை தட்டிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமாரை இளைஞர் ஒருவர் நடந்து கொண்டே செல்பி வீடியோ எடுத்துள்ளார். இதனால் கடுப்பான சிவகுமார் அந்த இளைஞரின் செல்போனை தட்டிவிட்டார்.
பின் இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட சிவகுமார், ஆர்வம் மிகுந்த ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது தவறுதான், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார். சிவகுமாரின் இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.