shadow

மீடூ குற்றச்சாட்டு: ஏ.ஆர்.ரஹ்மான் எச்சரிக்கை

மிடூ மூலம் பெண்கள் தைரியமாக முன்வந்து புகார் தெரிவிப்பதை வரவேற்பதாக கூறியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அதே நேரத்தில் இந்த விஷயத்தை யாரும் தவறாக கையாளக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீடூ குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் கூறியதாவது: மீடு வில் பாலியல் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்களும், குற்றச்சாட்டுக்கு உள்ளாவோரின் பெயர்களும் எனக்கு அதிர்ச்சியை அளிக்கின்றது. சாதிக்க வருவோருக்கு எந்த இடையூறும் ஏற்படாத சூழலை உருவாக்க நானும் எனது குழுவினரும் உறுதியேற்றுள்ளோம்

பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை சமூக வலைதளம் கொடுத்தாலும், அது தவறாக கையாளப்பட்டுவிடக் கூடாது என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

Leave a Reply