மின்னல் தாக்கி வெடித்த செல்போன். பொறியியல் மாணவர் பலி
கடந்த சில நாட்களாக சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில் நேற்று முன் தினம் சார்ஜர் ஆகிக்கொண்டிருந்த செல்போன் மீது மின்னல் தாக்கியதால் அருகில் தூங்கி கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார்.
சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த சித்திரைவேலு என்பவரது மகன் ரஞ்சித் தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு இவர் தனது செல்போனுக்கு சார்ஜர் போட்டுவிட்டு அருகில் படுத்து தூங்கினார். நள்ளிரவில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த போது மின்னல் தாக்கியதில் சார்ஜர் வெடித்து செல்போன் தீப்பிடித்து எரிந்தது. அருகில் படுத்திருந்த ரஞ்சித் மீதும் தீ பரவியது.
இதனால் பலத்த காயம் அடைந்த ரஞ்சித்தை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே ரஞ்சித் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.