சென்னை ஐகோர்ட்டில் இன்று தீர்ப்பு

ஊரடங்கு காலத்தில் கடந்த நான்கு மாதங்களாக மின்சார ரீடீங் எடுக்காமல் திடீரென மொத்தமாக ரீடீங் எடுத்ததால் மின்கட்டணம் மிக அதிக அளவில் வருவதாக புகார் எழுந்தது

இது குறித்து பிரபல நடிகர் நடிகைகளும் தங்களது டுவிட்டர்களில் கருத்து தெரிவித்தனர் என்பது இந்த கருத்துக்கள் வைரலாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அதிக மின் கட்டணம் வசூலிப்பதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடந்து வந்தது

இந்த நிலையில் மின் கட்டண நிர்ணயத்துக்கு எதிரான வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட் தீர்ப்பளிக்க உள்ளது ஊரடங்கு காலத்தில் முந்தைய மின் கட்டண தொகை அடிப்படையில் புதிய கட்டணம் நிர்ணயிக்க எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply