மாஸ்டர் படப்பிடிப்பில் திடீரென நுழைந்த அரசு அதிகாரிகள்: விஜய்யை அழைத்து சென்றதால் பரபரப்பு

’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் இன்று காலை முதல் விஜய் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ’மாஸ்டர்’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீரென படப்பிடிப்பு தளத்திற்கு வந்த வருமான வரி அதிகாரிகள் விஜய்யிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி அவரிடம் சம்மன் கொடுத்து அதன் பின்னர் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்

பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் இன்று காலை முதல் நடைபெற்றுவரும் வருமான வரி சோதனையை அடுத்து விஜய் இடமும் அது சம்பந்தமான கேள்விகள் கேட்க வாய்ப்பு இருப்பதாக வனத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply