மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் மீது குற்றநடவடிக்கை : போலீசார் அறிக்கை
சமீபத்தில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப் அந்நாட்டு சிறையில் இருந்து தப்பி, இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்தபோது இந்திய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணையை இந்திய அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதிப் மீது பணம் கையாடல், சட்டவிரோத பணப்பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாகவும், வேறு நாடு செல்ல தடை உள்ளபோது அவர் இந்தியாவிற்கு தப்பி சென்றதால் அவர் மீது குற்றநடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாலத்தீவு போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.