மார்ட்டின் உதவியாளர் பழனிசாமி மரணம்: சிபிசிஐடி விசாரணை கோரி வழக்கு
பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் பழனிசாமி மர்மமான முறையில் மரணம் அடைந்த நிலையில் இதுகுறித்து சிபிசிஐடி விசாரணை செய்யக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மரணம் அடைந்த பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நாலை விசாரணைக்கு வரும் என தெரிகிறது.
மேலும் பழனிசாமி உடலை தங்கள் தரப்பில் ஒரு மருத்துவரை வைத்து மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.