மான்செஸ்டர் மைதானத்தில் பட்டைய கிளப்பிய அனிருத்-சிவகார்த்திகேயன்

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டு ரசிக்க சென்ற ஏராளமான பிரபலங்களில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயனும் ஆவர். இருவரும் மைதானத்தில் எடுத்து கொண்ட செல்பி புகைப்படங்களை அவரவர் டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது

இந்த போட்டியை நேரில் கண்டு ரசித்தது ஒருபுதுவிதமான அனுபவம் என்று சிவகார்த்திகேயனும், என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் இதுஎன்று அனிருத்தும் தங்களது டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply