shadow

மாணவி பிரியாவின் பெற்றோரை நேரில் சந்தித்த முதல்வர்: வீட்டிற்கான ஆணையை கொடுத்தார்

சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறால் பலியானார்

இதனை அடுத்து மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரியாவை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் அவரது சகோதரர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ப்ரியாவின் பெற்றொர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை ஒதுக்கிய உத்தரவின் நகலையும் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது