அனிதா துவங்கி 3 மாணவர்களின் உயிரும் பறிபோனதற்கு அரசின் கபட நாடகமே காரணம் என திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் ஒன்றுகூடி தக்க பாடம் புகட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு எதிராக திமுகவின் அனைத்து தலைவர்களும் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு அவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply