மருமகள் கள்ளக்காதல்: மாமனார் கொடுத்த அதிர்ச்சி தண்டனை

மருமகள் கள்ளக்காதலில் இருந்ததை கண்டு பிடித்த மாமனார், மருமகளுக்கு கொடுத்த கொடூர தண்டனையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் ஆகி அதன்பின்னர் வெளிநாட்டு வேலைக்கு சென்றுவிட்டார். அவருடைய மனைவி, மாமனார் மாமியார் வீட்டில் இருந்து வந்துள்ளார்

இந்த நிலையில் மருமகளுக்கு 30 வயது இளைஞர் ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து ஒரு நாள் மாமனார் தற்செயலாக மருமகள் வேறு ஒரு இளைஞனுடன் கள்ளக்காதலில் இருந்ததை கண்டுபிடித்தார்

உடனடியாக அவர் தனது உறவினர்களை அழைத்து கையும் களவுமாக கள்ளக்காதல் ஜோடியை பிடித்து கம்பத்தில் கட்டி வைத்து உதைத்து, அதன்பின்னர் கத்தியை எடுத்து கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை அறுத்தார்

மூக்கறுபட்டதால் இருவரும் வலியால் துடித்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட போலீசார் உடனடியாக அங்கு வந்து கள்ளக்காதல் ஜோடியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தது

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் மாமனார் உள்பட 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடியின் மூக்கை மாமனாரே அறுத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply