shadow

மருத்துவமனையில் சசிகலாவின் கணவர் நடராஜன்: உடல்நிலை மோசம் என தகவல்

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடராஜனுக்கு கல்லீரல், நுரையீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனை இருப்பதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் சசிகலாவின் அரசியல் பாதைக்கு உறுதுணையாக இருந்த நடராஜன் திடீரென உடல்நிலைக்குறைவாக இருப்பது சசிகலா அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply