அதிர்ச்சி தகவல்
மதுரை அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கடந்த திங்களன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு முருகன் செய்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார்களின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
அதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக அருண்பாண்டி, விக்கி, தவசி, ராமச்சந்திரன், சல்மான்கான் ஆகியோர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களில் ஒருவர் சிறுவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தலைமறைவாக உள்ள இருவரை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.