shadow

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதில் இருந்தே பல மாற்றங்கள் ஏற்பட்டு அனைவரும் பாரட்டும் வகையில் உள்லது.

இந்த நிலையில் புதிய அறிவிப்பாக மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

ஒரு மாணவர் ஒரு மரம் வளர்த்தால் ஒவ்வொரு பாடத்திற்கும் 2 மதிப்பெண்கள் வீதம் ஆறு பாடங்களுக்கு 12 மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகம் கிடைப்பது மட்டுமின்றி மரம் வளர்க்கும் ஆர்வமும் மாணவர்களுக்கு அதிகரிக்கும். இதனால் நாட்டில் மழையும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply